×

வடிவுடையம்மன் கோயிலில் பொன்.மாணிக்கவேல் ஆய்வு

திருவொற்றியூர்: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மற்றும் கலையம்சம் கொண்ட கல்தூண்கள் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கைப்பற்றி  வருகின்றனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை சென்னை கிண்டியில் வைத்துள்ளனர்.இந்நிலையில் இந்த சிலைகளை பாதுகாப்பாக வைக்க திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் மற்றும் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் உட்பட கோயில்கள் தேர்வு  செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள், அங்கு சிலைகளை  பாதுகாப்பாக வைக்க முடியுமா? என்பது குறித்து வருவாய்த்துறை, அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.ஏற்கனவே பல்வேறு ஐம்பொன் சிலை மற்றும் உலோகச் சிலைகள் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது கற்சிலைகளையும் இந்த கோவிலில் பாதுகாக்க  அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponnum Manikkaval ,Vaidudayamman , temple ,Vaidudayamman, Gold
× RELATED கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110...